பொத்துவில் பெஸ்ட் - PVL1st

அறிவித்தல்


நாடு முழுவதும் வாசகர்களைக் கொண்ட எமது முதல்தர இலவச SMS சேவையை நீங்களும் பெற்று பயன்பெறுங்கள்!

கண்ணைக் கவரும் வண்ணத்துப்பூச்சிகள்



வண்ணத்துப் பூச்சி அல்லது பட்டாம்பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். 

பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புறச் செய்யும். 

முட்டையிலிருந்து, குடம்பி நிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். 

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. 

பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் (இமய மலையிலும்), கனடாவின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் வெப்பம் நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. இப்பூச்சிகள் பல்லுருத்தோற்றத்தை வெளிப்படுத்தினாலும் ஒன்றைப் போல மற்றொன்றின் தோற்றம், பண்புகள், ஒலியெழுப்புதல், இருப்பிடம் முதலியவற்றில் ஒன்றுபட்டு வண்ணத்துப்பூச்சிகளாகவே காணப்படுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு 3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு பறந்தும் செல்கின்றன.

இவ்வழகான
பட்டாம்பூச்சிகளை நாம் பார்க்கும் போதெல்லாம் நமது மனமும் பட்டாம்பூச்சி போல் பறப்பது என்பதும் இயல்புதான்.

- பொத்துவில் பெஸ்ட்

நீரிழிவு நோய் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்




ன்று உலகில் அதிகமானோரை பீடித்துள்ள நோயாக நீரிழிவு நோய் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின் படி 2018 இல் உலகளாவிய ரீதியில் 429 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2045 இல் 90 சதவீதமான மக்களை இந்த நோய்  பிடிக்கும் என்பதும் 2012ம் ஆண்டு 1.5 மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறந்துள்ளர் என்பதும் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

இலங்கையில் 4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என நீரிழிவு சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக இந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்பதும் ஒரு முக்கிய தகவலாகும்.

எனவே இந்த நோயில் இருந்து விடுபட உணவுப் பழக்கத்தில் மாற்றமும், விழிப்புணர்வும் சமூகத்திற்கு கட்டாய தேவையாகும்.

- பொத்துவில் பெஸ்ட் 

பிளாஸ்டிக்



ண் -1  ஒன்று என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில்தண்ணீர் பாட்டில்கள்,குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.

 எண்-2 இரண்டு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் ஷாம்பு டப்பா மற்றும் சில கடினமான பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.

எண்-3 மூன்று என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொட்டலங்கள் கட்டும்  பைகள் ,பைப்புகள்,கிளினிங் பவுடர்கள் அடைத்துள்ள டப்பாக்கள்,போன்றவைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.இது ''டையாக்ஸின்''போன்ற நச்சு வாயுக்களை வெளியேற்றுவதால் நம் உடலுக்கு சகலவிதமான தீங்குகளை விளைவிக்கும்.சூடான பொருட்கள் எதுவும் இதில் வைக்கக்கூடாது.

எண்-4 நான்கு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொருட்களும்,கேரியர் பைகளும் தயாரிக்கப்படும்.

எண்-5 ஐந்து என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில்  சூடான உணவுப்பொருட்களை வைக்கவோ,பயன்படுத்தவோ கூடாது.மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தலாம்.

எண்-6 ஆறு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொருட்களை வைத்து சாப்பிடலாம்.ஆனால் எடுத்துச்செல்லக்கூடாது.

எண்-7 ஏழு என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உலக நாடுகள் தடை செய்து உள்ளன.

 1முதல் 4 வரை உள்ள எண் பொறித்த பிளாஸ்டிக்குகள் உணவு எடுத்துச்செல்ல பயன்படுத்தக்கூடாது.அவை வெப்ப சூழல் மாறும்போது'கார்சினோசின்' எனப்படும் வாயுவை வெளியிடுவதால் புற்றுநோய்கள் வரும்.

 5 மற்றும் 6 எண் பொறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களை வைக்கவோ,அல்லது எடுத்துச்செல்லவோ கூடாது.

- பொத்துவில் பெஸ்ட்

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வீரர் அம்லா!


ன்றைய கிரிக்கெட் உலகின் மறக்கமுடியாத

நம்பிக்கை நட்சத்திரம்,

விளையாட்டிற்காக மதத்தை விட்டுவிட்டு செல்பவர்களுக்கு மத்தியில், இவ்விளையாட்டில் "ஷரீயத்" அனுமதிக்காத ஒன்றை அவர் ஒருபோதும் செய்ததில்லை,


தென்ஆப்பிரிக்க அணியின் T-shirt நிறுவனம் மதுவை விளம்பரப்படுத்தி அந்த பிராண்டின் லோகோ அதில் 

பொறிக்கப்பட்டிருக்கும்,அதை அணிந்துகொண்டுதான்

ஆட வேண்டும், இது விதிமுறை

இதை அணிந்து கொண்டு ஆடினால் அந்த மதுவை

நாம் ஆதரித்ததுபோன்று ஆகிவிடும்,நாளை இறைவனுக்கு முன் நாம் பதில்சொல்லி ஆக

வேண்டும் என்று பயந்தவராக அதை அணிய மறுத்து விட்டார், இதற்காக விளையாட்டு போட்டியில் தான் பெறும் ஒவ்வொரு ஊதியத்திலும் 50% அந்தக் நிறுவனத்திற்கு இன்றுவரை நஷ்ட ஈடாக கொடுத்து வருகிறார்.

    

* அனைத்து வீரர்களுக்கும்.மதுவும்,அழகிகளும்

இலவசமாக வழங்கப்படும்,அதையும் மறுத்துவிட்டார்,


 * வீரர்களின் அறையில் நான் கோபப்படும்போது

திரும்பிப் பார்த்தால்,"ஹாசிம் அம்லா"குர்ஆன்

ஓதிக்கொண்டிருப்பார்,இதைப்பார்க்கும்போது எனது மனம் அப்படியே சாந்தமாகிவிடும்,என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்"டேல் ஸ்டைன்" சொல்கிறார்.


* நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் "ஹாசிம் அம்லா"வின் செயற்பாடுகள்தான்,

அவரது நடவடிக்கையால் கவரப்பட்டு பின்னர் அல்குர்ஆனை பிடித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்,

என்று அந்த அணியின் மற்றுமொரு வேகப்பந்து

வீச்சாளர் வைன் பானல் கூறுகிறார்.


* நான் தற்போது இஸ்லாத்தை சரியாக பின்பற்றுவதற்கு "ஹாசிம் அம்லாவின்" நடத்தைகளே காரணம் என்று,அதே அணியின் சுழற்பந்து வீச்சாளர்

-இம்ரான் தாஹிர் கூறுகிறார்.


* அம்லா போன்ற நேர்மையான வீரரை நான் இதுவரை பார்த்ததே இல்லை,என்று"க்ரஹாம் ஸ்மித்" குறிப்பிடுகிறார்.


ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வேகமாக,  2000,3000,

4000 மற்றும்  5000 ரன்களை அடித்த ஒரேவீரர்,

Fastest batsman to reach 2000(40 inns), 3000 (59 inns)

4000(81 inns) 5000 (101 inns) 6000 (123 inns) 7000(150inns) என

கிரிக்கெட் உலகின் பெரும் சாதனையாளர்.


 அணிகள் வெற்றிபெரும்போது Beer குழுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்,எனினும் 

தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெரும் சந்தர்ப்பத்தில் 

Beer குழுக்குவதை நாங்கள் "அம்லா"வுக்காக 

தவிர்த்து வந்தோம்,எங்களுக்கு "அம்லா"வைவிட

Beer முக்கியமல்ல என்று அந்த அணியினர்களான

"ஏபீடி வில்லியஸ்"கூறினார்.


"ஒவ்வொரு தொழுகை வேளையிலும் மைதானத்திலேயே தொழும் ஒப்பற்ற வீரர்,நபி(ஸல்)

அவர்களின் சுன்னத்தான"தாடி"யுடன் அவர் வலம் வருவது அவரை தனி அடையாளமாக காட்டும்,நபியின்

சுன்னத்தைப் பேணுவதில் பிறர் செய்யும் விமர்சனங்களை அவர் கண்டு கொள்வதில்லை.


- பொத்துவில் பெஸ்ட்


226 ஆண்டுகள் வாழ்ந்த கொய் மீன்

226 ஆண்டுகள் வாழ்ந்த கொய் மீன்